×

ஐதராபாத்தில் இருந்து துபாய் செல்லும் ‘விமானத்தை கடத்துவோம்’ இ-மெயிலில் மிரட்டல்: 3 பேரை பிடித்து விசாரணை

திருமலை: ஐதராபாத்தில் இருந்து துபாய் செல்லும் விமானத்தை கடத்தப்போவதாக இ-மெயிலில் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை பிடித்து சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வழக்கம்போல் துபாய்க்கு நேற்றிரவு ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு திடீரென இ-மெயில் வந்தது. அந்த மெயிலில், ஐதராபாத்தில் இருந்து துபாய்க்கு செல்ல தயாராக உள்ள விமானத்தை கடத்தப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் உஷாரான போலீசார் துபாய் செல்லும் விமானியிடம் ‘விமானத்தை இயக்க வேண்டாம்’ என அவசர தகவல் கொடுத்தனர். ெதாடர்ந்து விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

பின்னர் துபாய் செல்ல இருந்த விமான பயணத்தை ரத்து செய்து, பயணிகள் அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்ேதகப்படும் வகையில் இருந்த 3 பேரை சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, ஏர்போர்ட் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ-மெயிலில் குறிப்பிட்டபடி 3 பேரும் நடுவானில் விமானத்தை கடத்த வந்தவர்களா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதேபோல் இ-மெயிலை அனுப்பியது யார்? என்பது குறித்து ஐ.பி. அட்ரஸ் மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஐதராபாத்தில் இருந்து துபாய் செல்லும் ‘விமானத்தை கடத்துவோம்’ இ-மெயிலில் மிரட்டல்: 3 பேரை பிடித்து விசாரணை appeared first on Dinakaran.

Tags : Idarabad ,Dubai ,Thirumalai ,I. S. F ,Dinakaraan ,
× RELATED சர்வதேச மொபைல் எண்ணை பயன்படுத்தி...